Tsunami Alert: திடீரென குலுங்கிய கட்டிடங்கள்.. நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுப்பு.!
கிரீஸ் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மே 22, ஏத்தன்ஸ் (World News Tamil): ஐரோப்பாவில் உள்ள கிரீஸ் நாட்டில் இன்று காலை ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகள் அளவில் பயங்கர நிலநடுக்கமானது ஏற்பட்டது. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் அனைவரும் வீதிகளில் தஞ்சம் புகுந்த நிலையில், தற்போது சுனாமி எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டது. அங்குள்ள பிரபலமான சுற்றுலா மையமான எளன்டா பகுதியில் இருந்து 58 கிலோ மீட்டர் தொலைவில் 77 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது சுமார் 100 கிலோமீட்டர் வரை உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அங்குள்ள மக்கள் கவனமாக இருக்க வேண்டி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல கடந்த வாரத்தில் தான் கிரீஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள நிலப்பரப்பு பகுதியில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. Nancy Mace: நாடாளுமன்றத்தில் நிர்வாண போட்டோ காண்பித்த பெண் எம்பி.. பரபரப்பு சம்பவம்.!
கிரீஸ் நிலநடுக்கம் :
🚨🚨BREAKING #Greece Mediterranean Sea #Earthquake Magnitude 6.2 to 7.2. Possible #Tsunami Alert
Exactly 8 days ago, Same Location. I already De-coded for a 5/22/2025 hit, several weeks ago pic.twitter.com/ABN6SMelmZ
— DayWalker378 (@DayWalker378) May 22, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

