காதல் மனைவியிடம் ஜாதியைச்சொல்லி வம்பு.. கணவனுக்கு ஆப்பு வைத்த சம்பவம்.!
பெற்றோரை எதிர்த்து தன்னை நம்பி காதலித்து கரம்பிடித்த மனைவிக்கு கணவர் துரோகம் செய்ய நினைத்து இறுதியில் கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
ஏப்ரல் 17, விருகம்பாக்கம் (Chennai News): சென்னையில் உள்ள விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் அருண் அழகம்பெருமாள். இவர் இளம்பெண்ணை காதலித்து வந்த நிலையில், பெண் பெற்றோரை எதிர்த்து அருணை கரம்பிடித்தார். இதனிடையே, காதல் மனைவியிடம் இருந்து சமீபகாலமாக விலகி இருந்த அருண், மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்ய முற்பட்டுள்ளார். நல்லா இழுடா குழந்தை.. டாக்டர் செய்யிற காரியமா இது? பகீர் காட்சிகள் வைரல்.!
இளைஞர் அதிரடி கைது:
மேலும், இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, காதல் மனைவியை ஜாதியைச்சொல்லி அவதூறுக பேசி திட்டி இருக்கிறார். இரண்டாவது திருமணத்துக்கான ஏற்பாடுகளும் நடந்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர், அருணின் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
(The above story first appeared on LatestLY on Apr 17, 2025 08:17 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

