Sanjeev Kumar Death Poster | Love Picture (Photo Credit: Twitter / Getty)

ஏப்ரல் 18, சென்னை (Chennai News): இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி (Paramakudi, Ramanathapuram), மஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவ் குமார். இவருக்கு இன்ஸ்டாகிராம் (Instagram Connection Ends Love) மூலமாக 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்ததாக தெரியவருகிறது. திருப்பூரில் (Tiruppur) வேலை பார்த்துக்கொண்டு இருந்த சஞ்சீவ், தனது பிறந்தநாளை (Birthday Celebration With Love Girl) கொண்டாட காதலியன சிறுமியோடு சென்னை வந்துள்ளார்.

சென்னை வந்த காதல் ஜோடி நகரை சுற்றிப்பார்த்துவிட்டு ஊர் திரும்ப கோயம்பேடு சென்றுள்ளது. அப்போது, காதலி குளிர்பானம் என குடித்ததை சஞ்சீவ் குடித்த நிலையில், அதில் விஷம் கலந்திருந்ததாக தெரியவருகிறது. இந்த தகவலை அறிந்த சஞ்சீவினி உறவினர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை அனுமதி செய்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சஞ்சீவ் பரிதாபமாக உயிரிழந்தார். Arthi Mittal Sex Rocket: ஒரு பெண்ணுக்கு ரூ.60 ஆயிரம்; பாலிவுட்டை பதறவைத்த நடிகையின் விபச்சாரம்.. பரபரப்பு தகவல் அம்பலம்.!

மரணமடைவதற்கு முன்பு காதலி குளிர்பானத்தில் எலிமருந்து கலந்து கொடுத்தார் என வாக்குமூலம் அளித்துவிட்டு சஞ்சீவ் உயிரை இழந்ததால், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் சஞ்சீவின் உடல் மஞ்சூர் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.