Heart Wrenching Horror: பாலியல் தொல்லை கொடுத்த நபரின் ஆணுறுப்பு, இதயத்தை சமைத்து சாப்பிட்ட 65 வயது மூதாட்டி..!
சிறார்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை கொலை செய்த மூதாட்டி, இதயம் மற்றும் ஆணுறுப்பை வெட்டி சமைத்து சாப்பிட்ட சம்பவம் பிரேசிலில் நடந்துள்ளது.
மார்ச் 10, சாவ் பாலோ (World News): பிரேசில் நாட்ல உள்ள சாவ் பாலோ கடற்கரை ரிசார்ட் ஒன்றில், குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை கொலை செய்து, அவரின் ஆணுறுப்பு மற்றும் இதயத்தை சாப்பிட்டதாக புகார் எழுந்துள்ளது. 62 வயதாகும் மூதாட்டி இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம், சர்வதேச அளவில் எதிரொலித்து இருக்கிறது. Sunita Williams Return to Earth: 9 மாதங்களுக்குப்பின் பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்.. தேதி குறித்த முழு விவரம் இதோ..!
ஆணுறுப்பை சமைத்து சாப்பிட்ட மூதாட்டி:
அமெரிக்காவில் உள்ள பெரு, சாவ் பாலோ பகுதியில் வசித்து வருபவர் மார்க்வெஸ் பெரேரா. இவர் சம்பவத்தன்று சிறார்களுக்கு பாலியல் ரீதியான தொல்லை அளித்ததாக கூறபடுகிறது. இதனை கவனித்த 65 வயது மூதாட்டி ஜோசபா லீமா டி சூசா, மார்க்வெசை கொலை செய்தார். பின் அவரின் உடலில் இருக்கும் இதயத்தை துண்டாக அறுத்து இருக்கிறார். அதனுடன் நபரின் ஆணுறுப்பையும் அறுத்து கடற்கரையில் வைத்து சமைத்து சாப்பிட்டு இருக்கிறார்.
காவல்துறை தொடர் விசாரணை:
இந்த சம்பவம் நடந்து முடிந்த பின்னர், மார்க்வெசின் உடல் அதிகாரிகளால் மீட்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டபோது உண்மை தெரியவந்தது. முதலில் ஆணுறுப்பு, இதயம் அறுக்கப்பட்டு இருந்ததால், அதிகாரிகள் இப்படியான கொடூர கொலையை யார் செய்திருப்பார்கள்? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர். அதன் பின்னரே அதிகாரிகளுக்கு உண்மை தெரியவந்தது. மூதாட்டிக்கு உதவி செய்த நபருக்கும் அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர். தொடர் விசாரணை நடந்து வருகிறது.
(The above story first appeared on LatestLY on Mar 10, 2025 07:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

