Prostitution & Arrested (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 08, புனே (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே மாவட்டம், பிம்பிரி - சிஞ்சவாத், ஷிஞ்சேவாடி பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஸ்பாவில் பெண்களை வைத்து ஹைடெக் முறையில் விபச்சாரத்தொழில் நடைபெறுவதாக காவல்துறையினர் மற்றும் விபச்சார தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

விபச்சாரத்தொழில் உறுதி: இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சற்றும் எதிர்பாராத வேலையில் திடீரென ஸ்பாவுக்குள் நுழைந்து அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் ஸ்பாவில் விபச்சாரம் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டது. விசாரணைக்குப்பின் ஸ்பா உரிமையாளர் உட்பட இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டனர். Nagpur Truck Rammed into Accident: ஆம்புலன்ஸ் உட்பட 12 வாகனங்கள் மீது மோதிய கனரக லாரி: 4 பேர் பலி.. தறிகெட்ட வேகத்தால் நொடியில் சோகம்.!

4 இளம் பெண்கள் மீட்பு: மேலும், அவர்களால் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட நான்கு இளம் பெண்களும் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்‌. ஹைடெக் முறையில் விபச்சாரம் நடத்தியது குறித்து கைதான நபர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் சார்ந்த கும்பலுக்கும் வலைவீசப்பட்டுள்ளது‌.