பிப்ரவரி 26, காக்கிநாடா (Andhra Pradesh News): ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள காக்கிநாடா - சின்னம்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த லாரி ஒன்று, இன்று அதிகாலை டயர் வெடித்ததன் காரணமாக ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்தது. அச்சமயம், இவ்வழித்தடத்தில் ஆர்.டி.சி பேருந்து வந்த நிலையில், லாரிக்கு பஞ்சர் ஓட்டும் பணியில் லாரி ஓட்டுநர் உட்பட சிலர் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது, ஆர்.டி.சி பேருந்து லாரியின் மீது மோதி விபத்திற்குள்ளாகவே, லாரியின் அடியில் இருந்த பணியாளர்கள் 4 பேரின் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு, பலியானோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற அரசு பேருந்தை காவல் துறையினர் துரத்திப் பிடித்தனர். Nayanthara Wishes to Samantha: சமந்தாவுக்கு மனதார வாழ்த்துக்கள் தெரிவித்த நயன்தாரா: காரணம் இதுதான்.. குவியும் பாராட்டுக்கள்.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)