பிப்ரவரி 11, சென்னை (Sports News): 18 வது டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டிகள் மார்ச் மாதம் 14, 2025-ல் தொடங்கி, மே மாதம் 25, 2025 ல் (IPL Schedule 2025) நிறைவுபெறுகிறது. இந்திய அளவில் நடைபெறும் இந்தியன் பிரிமியர் லீக் (Indian Premier League) போட்டியில், 10 அணிகள் தங்களுக்குள் மோதிக்கொள்ளும். போட்டியின் முடிவில் வெற்றிபெறும் அணிக்கு ரூ.20 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும். 74 போட்டிகள் கொண்ட இந்த ஆட்டத்தில், ஒவ்வொரு அணியும் தனது வெற்றிக்காக பலப்பரீட்சை நடத்தும். சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி, 2008 முதல் நடந்த 17 ஐபிஎல் போட்டிகளில் 5ல் அதிகபட்சமாக வெற்றி அடைந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியும் 5 போட்டிகளில் வெற்றி அடைந்துள்ளது. ஐபிஎல் போட்டியில் 8,004 என்ற அதிக ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் விராட் கோலி (Virat Kohli) இருந்தாலும், அவரின் பெங்களூர் அணி தற்போது வரை ஒரு கோப்பையை கூட பெற்றிருக்கவில்லை. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் சார்பில், ஐபிஎல் 2025 போட்டிக்கான புதிய டீசர்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2025 ஐபிஎல் போட்டிக்கான புதிய ஜெர்சி வெளியிடப்பட்டுள்ள காரணத்தால், ரசிகர்கள் அடுத்தபடியாக ஐபிஎல் ஆட்டத்தை எதிர்பார்க்க தொடங்கி இருக்கின்றனர். Shohaly Akhter: உலக கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை.. வங்கதேச கிரிக்கெட் வீராங்கனை ஷோஹாலி அக்தர் 5 ஆண்டுகள் தகுதிநீக்கம்.!
ஐபிஎல் 2025 போட்டிக்கு சென்னை அணியின் புதிய டீ-சர்ட்:
This Jersey = The soul of our Yellovely city! 💛
Own a piece of the emotion - https://t.co/Hmgx9M0u5X 🛍️👕#WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/MBnQ0U6lPJ
— Chennai Super Kings (@ChennaiIPL) February 11, 2025
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)