TTV Dhinakaran | MK Stalin (Photo Credit: Twitter / File Pic)

மே 07, சென்னை (Political News): அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் நல்லாட்சி தருகிறோம் என்று கூறி, அரசாட்சிக்கு வந்த திமுக தனது 5 ஆண்டுகளில் 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

இந்த 2 ஆண்டுகளில் மக்கள் துயரத்தின் தொடர் ஆண்டாக அனுபவித்து வருகிறார்கள். ஒரே கையெழுத்தில் நீட் தேர்வினை ரத்து செய்வோம் என்று கூறினார்கள், அதற்கான முன்னெடுப்பு என்பது முழுமை பெறவில்லை. Love Gang Rape: 16 வயது சிறுமியை காதலிப்பதாக நடித்து, 2 நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்; நெஞ்சை பதறவைக்கும் துயரம்.!

சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் திமுக தோல்வி அடைந்து இருக்கிறது. ஆளுங்கட்சி அத்துமீறல், அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கம் என 2 ஆண்டுகள் தொடருகிறது. ஆட்சிக்கு வந்தபோதே சொத்து வரி, மின்கட்டணம், பால் பாக்கெட் விலை போன்றவை உயர்த்தப்பட்டுள்ளது.

இதில் பால் பாக்கெட் விலை ஒரே ஆண்டில் எப்போதும் இல்லாத அளவு என 3 முறை உயர்த்தப்பட்டது. மக்களை வஞ்சித்து வரும் திமுகவின் செயலை எண்ணி, 2024 பாராளுமன்ற தேர்தலில் தகுந்த பாடத்தை மக்கள் புகட்டுவார்கள்" என தெரிவித்துள்ளார்.